Saturday, July 17, 2010

என்னடா நடக்குது இங்க...?

ஆபீசுக்கு ஒரு நாலு நாள் லீவு போட்டுட்டு அப்படியே நம்ம பொறந்த மண்ணு பக்கம் போலாமேன்னு கோயம்புத்தூர் போனேன் சாமீ...

இந்த உலக தமிழர் மாநாடுன்னு சொல்லிட்டு ஊர ஒரு வழி பண்ணி வச்சுருந்தாங்க... பாக்கறவன் எல்லாம் நான் ஏதோ கொலை குத்தம் செஞ்ச மாதிரி ஏன் உலக தமிழர் மாநாட்டுக்கு வரலைன்னு திட்டுராணுக நானும் லீவு கெடைக்கலன்னு சொல்லி சமாளிச்சேன்... ஆனா போகாததுக்கு வேற காரணம் அது தமிழ் உணர்வு இருக்கறவங்களுக்கு புரியும் ... நம்ம ஊர் பக்கம் ஒரு பலமொழி உண்டு செத்த கிளிக்கு சிங்காரம்ன்னு அது மாதிரி தமிழன காப்பாத்த வக்கில்லாதவங்க தமிழ் மொழி மாநாடு கொண்டாடுறாங்க...

மாநாட்டுளையும் பெருசா ஒன்னும் நடக்கலங்கறது பேப்பர்ல பார்த்தாலே தெருஞ்சுது.. வழக்கம் போல குடும்ப கச்சேரி தன நடந்துருக்கு இதுக்கு 380 கோடி செலவு வேற... எங்க சார் நடக்கும் இந்த மாதிரி கொடுமை எல்லாம் நம்ம தமிழ் நாட்ட தவிர.....

நம்ம நண்பன் திடீர்னு ஒரு குண்ட போட்டான் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட மீனவர்களுகாக போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டார்ன்னு... இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசிட்டாராம்.
ஆஊன்னா இறையாண்மைங்கறாங்களே அப்படீனா என்ன ன்னு தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லி குடுங்களேன் எனக்கு... தமிழன கொல்றதுக்கு ஆயுதம், பணம் குடுக்கறதா இல்ல தமிழன் செத்துட்டு இருக்கறப தமிழ் மொழி மாநாடு கொண்டடுருத என்ன எலவுன்னே புரியலப்பா....

ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது தமிழன வாழ விடுங்கன்னு மட்டும் பேசிட கூடாது போல அப்ப தான் இந்திய இறையாண்மை காப்பாத்தபடும் ன்னு நெனைக்கறேன்.... வாழ்க தமிழ் ஆனால் வாழ வைப்பதற்கு தமிழன் உயிரோட இருக்க மாட்டோம்....

No comments:

Post a Comment